நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. சில சின்னத்திரை தொடர் படப்பிடிப்புகள் மட்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. இந்த நிலையில் 100 பேர்களுடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இது நேற்று முதல் அமுலுக்கு வந்தது.
ஆனாலும் படப்பிடிப்புகள் எதுவும் நேற்று தொடங்கவில்லை. படப்பிடிப்புக்கு முந்தைய, பிந்தைய பணிகள் அதற்குரிய ஸ்டூடியோக்களில் ஊரடங்கு காலத்திலும் சிறிய அளவில் நடந்து கொண்டுதான் இருந்தது. நேற்று மூழு வீச்சுடன் தொடங்கியது.
தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர்கள் தயங்குவதாக தெரிகிறது. படப்பிடிப்பில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அதோடு முன்னணி நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்த படப்பிடிப்பும் நேற்று தொடங்கவில்லை.
இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருப்பதாவது: படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர்கள் தயார் நிலையில் இல்லாத காரணத்தால் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் தொடங்கவில்லை, இன்னும் ஒரு சில நாளில் படப்பிடிப்புகள் தொடங்கும். சின்னத்திரை தொடர்கள் தங்கள் படப்பிடிப்பை தொடங்கி உள்ளன. என்றார்.