விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. ஓடிடி தளத்தில் வெளியான 'த பேமிலிமேன் 2' வெப் தொடர் அவரை ஹிந்தி பேசும் ரசிகர்களிடமும் கொண்டு சென்றது. அந்தப் பிரபலத்தை வைத்து நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் புதிய வெப் தொடர் ஒன்றில் சமந்தாவை நடிக்க வைக்க பேசுவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், அது புதிய வெப் தொடர் அல்லவாம்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், 'பாகுபலி' படத்தைத் தயாரித்த நிறுவனத்துடனும், இயக்குனர் ராஜமவுலியுடனும் இணைந்து 'பாகுபலி - பிபோர் தி பிகினிங்' என்ற ஓடிடி தொடரைத் தயாரிக்க முடிவு செய்தது. தேவ கட்டா, பிரவீன் சட்டரு இணைந்து ஓடிடி தொடரை உருவாக்கினார்கள். ஆனால், அத்தொடர் ஒளிபரப்பும் அளவிற்குத் தகுதியானதாக இல்லை என அத்தொடரை அப்படியே நிராகரித்தது.
அத்தொடரில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த மிருணாள் தாக்கூரும் மீண்டும் இத்தொடரில் நடிக்க முடியாது என விலகிவிட்டார். வேறு இயக்குனர், வேறு நடிகையை வைத்து அத்தொடரை மீண்டும் தயாரிக்க நெட்பிளிக்ஸ் முடிவு செய்து பெரும் தொகை சம்பளம் தருவதாகச் சொல்லி சமந்தாவிடம் 'சிவகாமி' தொடரில் நடிக்க பேசியதாம். சமந்தா நடித்தால் பெரிய வரவேற்பைப் பெறும் என நினைத்த நிறுவனத்திடம் தொடரில் நடிக்க விருப்பமில்லை என சமந்தா நிராகரித்துவிட்டதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில வருடங்களுக்கு சினிமாவில் மட்டுமே நடிக்க சமந்தா நினைக்கிறார் என்றும் ஒரு தகவல்.