கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. ஓடிடி தளத்தில் வெளியான 'த பேமிலிமேன் 2' வெப் தொடர் அவரை ஹிந்தி பேசும் ரசிகர்களிடமும் கொண்டு சென்றது. அந்தப் பிரபலத்தை வைத்து நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் புதிய வெப் தொடர் ஒன்றில் சமந்தாவை நடிக்க வைக்க பேசுவதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், அது புதிய வெப் தொடர் அல்லவாம்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம், 'பாகுபலி' படத்தைத் தயாரித்த நிறுவனத்துடனும், இயக்குனர் ராஜமவுலியுடனும் இணைந்து 'பாகுபலி - பிபோர் தி பிகினிங்' என்ற ஓடிடி தொடரைத் தயாரிக்க முடிவு செய்தது. தேவ கட்டா, பிரவீன் சட்டரு இணைந்து ஓடிடி தொடரை உருவாக்கினார்கள். ஆனால், அத்தொடர் ஒளிபரப்பும் அளவிற்குத் தகுதியானதாக இல்லை என அத்தொடரை அப்படியே நிராகரித்தது.
அத்தொடரில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த மிருணாள் தாக்கூரும் மீண்டும் இத்தொடரில் நடிக்க முடியாது என விலகிவிட்டார். வேறு இயக்குனர், வேறு நடிகையை வைத்து அத்தொடரை மீண்டும் தயாரிக்க நெட்பிளிக்ஸ் முடிவு செய்து பெரும் தொகை சம்பளம் தருவதாகச் சொல்லி சமந்தாவிடம் 'சிவகாமி' தொடரில் நடிக்க பேசியதாம். சமந்தா நடித்தால் பெரிய வரவேற்பைப் பெறும் என நினைத்த நிறுவனத்திடம் தொடரில் நடிக்க விருப்பமில்லை என சமந்தா நிராகரித்துவிட்டதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில வருடங்களுக்கு சினிமாவில் மட்டுமே நடிக்க சமந்தா நினைக்கிறார் என்றும் ஒரு தகவல்.