‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கொரோனா இரண்டாவது அலை பரவிக் கொண்டிருந்தபோதும் ரஜினியின் அண்ணாத்த படத்தை ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பாதுகாப்பான முறையில் சிறப்பு அனுமதி பெற்று படமாக்கினர். அந்த படத்தில் தனக்கான காட்சிகளில நடித்து முடித்து விட்டே சென்னை திரும்பினார் ரஜினி.
அதையடுத்து ஆந்திராவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால் சிரஞ்சீவி, ராஜ மவுலி, மகேஷ்பாபு, பிரபாஸ் என பலரது படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் அங்கு துவங்கி உள்ளன. தமிழகத்தில் படப்பிடிப்பு துவங்கு இன்னும் அனுமதி கிடைக்காததால் இங்குள்ள பல நடிகர்கள் ஐதராபாத்தில் படமாக்க முடிவு செய்துள்ளனர். தற்போது விஷாலின் 31வது படத்தின் படப்பிடிப்பு அங்குள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இதையடுத்து சூர்யா, கார்த்தி போன்ற தமிழ் நடிகர்களின் புதிய படங்களின் படப்பிடிப்புகளையும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சில ஹிந்தி, கன்னட படங்களின் படப்பிடிப்புகளும் கூட இந்த பிலிம் சிட்டியில் விரைவில் நடைபெற உள்ளதாம். ஆக, ராமோஜிராவ் பிலிம்சிட்டி ஹாட் சிட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது.