தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி | 'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் | அமரனில் மிஸ் ஆச்சு... சேயோனில் அது நடக்குமா? | இயக்குனர் விஜய் என் வழிகாட்டி : ஜியா சங்கர் நெகிழ்ச்சி | நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல் | மறைந்த இயக்குனர் குடும்பத்துக்கு நிதி உதவி: மேடையிலே செக் கொடுத்தார் யோகி பாபு |

பிரபல யூ டியூப்பர் கிஷோர் கே.சாமி. தனது யூ டியூப் சேனல் மூலம் அரசியில் விமர்சனம் செய்து வந்தார். அவ்வப்போது சினிமா குறித்தும், சினிமா நட்சத்திரங்கள் குறித்தும் விமர்சனம் செய்வார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தி.மு.க தலைவர்களை கிஷோர் கே.சாமி அவதூறாக பேசியதாகவும், பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக விமர்சித்தாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கிஷோர் மீது நடிகை ரோகிணியும் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் மூலமாக நேற்று போலீஸ் கமிஷனருக்கு தனது புகார் மனுவை அனுப்பி உள்ளார். அந்த மனுவில், கடந்த 2014ம் ஆண்டு கிஷோர் கே.சாமி என்னை பற்றியும் எனது கணவர் ரகுவரன் பற்றியும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அவர் அந்த மனுவில் கூறியிருக்கிறார்.
இந்த மனு கீழ்பாக்கம் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.




