22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
காதலர்களாக வலம் வரும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி, முன்பெல்லாம் தாங்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட ரொமான்ட்டிக் போட்டோக்களை தான் சமூக ஊடகங்களில் அதிகம் பகிர்ந்து வருவர். குறிப்பாக விக்னேஷ் சிவன், நயன்தாராவை பற்றி குறிப்பிடும் போதெல்லாம் என் தங்கமே என உருகுவார். ஆனால் இப்போது இவர்கள் அடிக்கடி தனி விமானத்தில் பறப்பது தொடர்பான போட்டோக்கள் தான் அதிகமாக வெளியாகின்றன.
சென்னைக்கும், கொச்சிக்கும் அடிக்கடி சென்று வரும் இந்த காதல் ஜோடி கொரோனா காலம் என்பதால் தனி விமானத்தில் பறக்க தொடங்கி உள்ளனர். ஏற்கனவே இதுபோன்று இரு முறை தனி விமானத்தில் இவர்கள் சென்று வந்த நிலையில் இப்போது மீண்டும் தனி விமானத்தில் சென்னையில் இருந்து கொச்சிக்கு பறந்துள்ளனர்.
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் பாட்டு என்ற படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் இவர் கொச்சினுக்கு தனது காதலன் விக்னேஷ் சிவனையும் அழைத்து சென்றுள்ளார். தனி விமானத்தில் இவர் வந்திறக்கும் போடக்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.