இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை ஹன்சிகாவின் 50வது படம் மஹா. இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ளார். மதியழகன் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும், இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் மதியழகன் முயற்சி செய்தார்.
இதற்கிடையில் தனக்கு தெரியாமல் படத்தின் காட்சிகளை மாற்றி அமைத்தும், எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தராமலும் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும், படத்தை வெளியிட தடை கோரியும் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், படத்தின் உருவாக்கம், தலைப்பு உள்ளிட்ட எதிலும் இயக்குனருக்கு எந்த உரிமையும் இல்லை என ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதோடு படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக இயக்குனர் யு.ஆர்.ஜமீலுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி 5 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கவும் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.