இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் ஏப்ரல் மாதம் 26ம் தேதியிலிருந்து மூடப்பட்டுள்ளன. தியேட்டர்களை மூடி 50 நாட்களுக்கும் மேலாகின்றன. கடந்த வருடம் கொரோனா முதல் அலை வந்த போது மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் 10ம் தேதி தான் திறக்கப்பட்டது. சுமார் 8 மாத காலங்கள் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு திறக்கப்பட்ட தியேட்டர்கள், பிப்ரவரி மாதம் முதல் தான் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
முதல் அலையின் பாதிப்புக்கும் இரண்டாவது அலையின் பாதிப்புக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. முதல் அலையின் போது 8 மாதங்களுக்குப் பிறகுதான் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. முதல் அலையை விட இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகம் என்பது ஒரு புறம் இருந்தாலும் இந்த முறை ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் அது இன்னும் அதிகமாகலாம்.
இந்நிலையில் வட இந்திய மாநிலங்களில் ஜுலை மாதம் முதல் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சில முக்கிய படங்களை ஜுலை கடைசியில் வெளியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
அது போல தமிழ்நாட்டிலும் அனுமதி கிடைக்குமா என்று இங்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எப்படியும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி கொடுப்பார்கள். அதை ஜுலை மாதத்தில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது தியேட்டர்காரர்களின் எண்ணமாக உள்ளது.
'டாஸ்மாக்' கடைகளைத் திறந்த பின்பு தங்களது கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என டீக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கியது.
ஆனால், திரையுலகத்தில் இன்னும் யாருமே தியேட்டர்களைத் திறக்க அனுமதியுங்கள் என்று எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. புதிய அரசாங்கம் என்பதால் பொறுப்பிலிருப்பவர்களை அணுக திரையுலகத்தினர் தயங்கி வருவதாகத் தெரிகிறது என்றும் ஒரு பேச்சு உள்ளது.