காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக கடந்த மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆனாலும், சில டிவிக்களின் தொடர்கள் ரகசியமாக படமாக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது டிவி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பிக் பாஸ் ஜோடிகள்' என்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது பற்றி அந்நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் டுவீட் செய்துள்ளார்.
“பிக் பாஸ் ஜோடிகள் செட்டிற்குத் திரும்பியுள்ளோம். அனைத்து பாதுகாப்பு அம்சங்ளையும் பின்பற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்ற சென்ட்ராயன், கேப்ரியாலா, ஆஜித் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நிகழ்ச்சியின் படப்பிடிப்பிலிருந்து விலகினர்.




