'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக கடந்த மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆனாலும், சில டிவிக்களின் தொடர்கள் ரகசியமாக படமாக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது டிவி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பிக் பாஸ் ஜோடிகள்' என்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது பற்றி அந்நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் டுவீட் செய்துள்ளார்.
“பிக் பாஸ் ஜோடிகள் செட்டிற்குத் திரும்பியுள்ளோம். அனைத்து பாதுகாப்பு அம்சங்ளையும் பின்பற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்ற சென்ட்ராயன், கேப்ரியாலா, ஆஜித் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நிகழ்ச்சியின் படப்பிடிப்பிலிருந்து விலகினர்.