ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவியதால் தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர், நிவாரண நிதி திரட்டி வருகிறார். தமிழ் திரைப்பட கலைஞர்கள் நிதி வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மலையாளப் படத் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.
மலையாளத்தில் பழசிராஜா, காயங்குளம் கொச்சுண்ணி உள்ளிட்ட பிரமாண்ட படங்களை தயாரித்தவர். தமிழில் தூங்காவனம், தனுசு ராசி நேயர்களே படங்களை தயாரித்துள்ளார். இதுதவிர சிட்பண்ட் நிறுவனங்கள், ஓட்டல்களையும் நடத்தி வருகிறார். நிவாரண நிதி கொடுக்க தமிழ் தயாரிப்பாளர்கள் தயங்கிக் கொண்டிருக்கும்போது மலையாள தயாரிப்பாளர் ஒரு கோடி கொடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.