22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவியதால் தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர், நிவாரண நிதி திரட்டி வருகிறார். தமிழ் திரைப்பட கலைஞர்கள் நிதி வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மலையாளப் படத் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.
மலையாளத்தில் பழசிராஜா, காயங்குளம் கொச்சுண்ணி உள்ளிட்ட பிரமாண்ட படங்களை தயாரித்தவர். தமிழில் தூங்காவனம், தனுசு ராசி நேயர்களே படங்களை தயாரித்துள்ளார். இதுதவிர சிட்பண்ட் நிறுவனங்கள், ஓட்டல்களையும் நடத்தி வருகிறார். நிவாரண நிதி கொடுக்க தமிழ் தயாரிப்பாளர்கள் தயங்கிக் கொண்டிருக்கும்போது மலையாள தயாரிப்பாளர் ஒரு கோடி கொடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.