அந்த வார்த்தையை மட்டும் பயன்படுத்தாதீர்கள் : பார்வதிக்கு இயக்குநர்கள் வேண்டுகோள் | ராணுவ படத்துக்காக சரத்குமாருடன் கைகோர்த்த மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் | தர்ஷனுக்கு உதவி செய்த நபர் கைது : விஷயம் கேள்விப்பட்ட தந்தை ஹார்ட் அட்டாக்கில் மரணம் | நடிகரின் மனைவியிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு காந்தாரா நாயகி வழக்கு | சல்மான் கான் - அட்லி புதிய கூட்டணி? | இந்த வாரம்… 'டல்' ஆன வாரம்… | 'கண்ணப்பா' - தெலுங்கு தயாரிப்பாளர்களின் கவனம் ஈர்த்த ப்ரீத்தி முகுந்தன் | ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு ரவீனா டாண்டன் நோட்டீஸ் | கல்கி 2898 ஏடி - கமல்ஹாசன் நடித்தும் கண்டுகொள்ளாத வினியோகஸ்தர்கள் | தென்கரையில் டி.ஆர்.மகாலிங்கம் சிலை திறப்பு விழா : பி.சுசீலா, நாசர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்பு |
பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து வரும் படம் 'ராதே ஷ்யாம்'. இப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.
சுமார் 300 கோடி ரூபாய் செலவில் இப்படம் எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். இன்னும் சில காட்சிகளை படமாக்கிவிட்டால் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும். அதற்கு முன்னதாக மற்ற பணிகளை தற்போது செய்து வருகிறார்களாம்.
இதனிடையே, இப்படத்தின் அனைத்து விதமான உரிமைகளையும் சுமார் 400 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள அமேசான் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்துவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அனைத்து மொழிகளுக்குமான ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை என படத்தின் ஒட்டுமொத்த உரிமையும் அந்த 400 கோடியில் அடங்கும் என்கிறார்கள்.
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படத்தை எப்படி ஓடிடி தளத்தில் வெளியிடுவது என தயாரிப்பு நிறுவனமும் யோசித்து வருகிறதாம். எனவே, வரும் தசரா விடுமுறையில் தியேட்டர்களில் படத்தை வெளியிடவும் தயாரிப்பாளர் தயாராகி வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
ஜுலை மாதம் தெலுங்கு மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்கிறார்கள். அப்போது மக்கள் எப்படி வருகிறார்கள் என்பதைப் பொறுத்து 'ராதேஷ்யாம்' படத்தின் வெளியீட்டை முடிவு செய்யலாம் என்றும் தெரிகிறது.