தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் |
தமிழில் ரோஜாக்கூட்டம், பத்ரி உள்பட பல படங்களில் நடித்தவர் பூமிகா. சமந்தா நடித்த யுடர்ன் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஹிந்தி பிக்பாஸ்-15 நிகழ்ச்சியில் பூமிகா பங்கேற்பதாக வெளியான ஒரு செய்திக்கு அவர் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து பூமிகா வெளியிட்டுள்ள செய்தியில், ஹிந்தி பிக்பாஸ் -15 நிகழ்ச்சியில் நான் பங்கேற்க போவதாக வெளியான செய்தி உண்மையல்ல என்று தெரிவித்துள்ளார். அந்தநிகழ்ச்சியில் நட்சத்திர போட்டியாளராக கலந்து கொள்ள என்னை அழைத்தனர். ஆனால் எனக்கு ஆர்வம் இல்லாததால் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தவிர்த்து விட்டேன்.
அதோடு இதற்கு முன்பு ஹிந்தி பிக்பாஸ் 1,2,3 சீசன்களில் கலந்து கொள்ள பலமுறை எனக்கு அழைப்பு வந்தபோதும் நான் தவிர்த்து விட்டேன். காரணம், நான் ஒரு பொது ஆளுமை. திரைக்கு பின்னால் எனது தனிப்பட்ட வாழ்க்கையை கேமரா கண்கள் பதிவு செய்வதை நான் எப்போதுமே விரும்புவதில்லை என்று தெரிவித்துள்ளார் பூமிகா.