டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமூக வலைத்தளங்களில் டுவிட்டர் தளம் மட்டும்தான் குறைந்தபட்ச தரம் கூட இல்லாமல் அதன் பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல போலி கணக்குகள் டுவிட்டர் தளத்தில் மலிந்து கிடக்கின்றன. பிரபலங்களின் பெயர்களில் கூட பல போலி கணக்குகள் உள்ளன. அவற்றை நீக்க டுவிட்டர் நிறுவனம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உண்மை.
இரு தினங்களுக்கு முன்பு கூட மணிரத்னம் பெயரில் ஒரு போலி கணக்கு ஆரம்பமானதைப் பற்றி அவரது மனைவி சுஹாசினி எச்சரிக்கை விடுத்திருந்தார். வடிவேலு, யோகி பாபு, கவுண்டமணி, ஜனகராஜ் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களின் பெயர்களில் கூட போலி கணக்குகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், பலர் போலி கணக்குகளால் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி கிண்டலடிப்பது, சண்டை போடுவது என விஷயங்களைச் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமீப காலமாக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் டுவிட்டர் தளம் பற்றிய தனது அதிருப்தியை கோபமாக வெளியிட்டுள்ளார்.
“சில நேரங்களில் சில மூளையில்லாத, வேலையில்லாத டுவீட்களைப் பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த உலகத்தை நாம்தான் காக்கிறோம் என்ற எண்ணம் கொண்ட பலர் இப்போது இருக்கிறார்கள். இன்டர்நெட்டில் நீங்கள் எப்படி இருக்க நினைக்கிறீர்களோ அப்படி இருக்கலாம். முட்டாள்தனமான பலவற்றைப் பார்க்கிறேன். எனது நேரத்தையும், சக்தியையும் இனிமேல் வீணாக்க விரும்பவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.