ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

சமூக வலைத்தளங்களில் டுவிட்டர் தளம் மட்டும்தான் குறைந்தபட்ச தரம் கூட இல்லாமல் அதன் பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல போலி கணக்குகள் டுவிட்டர் தளத்தில் மலிந்து கிடக்கின்றன. பிரபலங்களின் பெயர்களில் கூட பல போலி கணக்குகள் உள்ளன. அவற்றை நீக்க டுவிட்டர் நிறுவனம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உண்மை.
இரு தினங்களுக்கு முன்பு கூட மணிரத்னம் பெயரில் ஒரு போலி கணக்கு ஆரம்பமானதைப் பற்றி அவரது மனைவி சுஹாசினி எச்சரிக்கை விடுத்திருந்தார். வடிவேலு, யோகி பாபு, கவுண்டமணி, ஜனகராஜ் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களின் பெயர்களில் கூட போலி கணக்குகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், பலர் போலி கணக்குகளால் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி கிண்டலடிப்பது, சண்டை போடுவது என விஷயங்களைச் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமீப காலமாக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் டுவிட்டர் தளம் பற்றிய தனது அதிருப்தியை கோபமாக வெளியிட்டுள்ளார்.
“சில நேரங்களில் சில மூளையில்லாத, வேலையில்லாத டுவீட்களைப் பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த உலகத்தை நாம்தான் காக்கிறோம் என்ற எண்ணம் கொண்ட பலர் இப்போது இருக்கிறார்கள். இன்டர்நெட்டில் நீங்கள் எப்படி இருக்க நினைக்கிறீர்களோ அப்படி இருக்கலாம். முட்டாள்தனமான பலவற்றைப் பார்க்கிறேன். எனது நேரத்தையும், சக்தியையும் இனிமேல் வீணாக்க விரும்பவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.