22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்புகள் நடத்தப்படாமல் முடங்கிப் போயுள்ளன. பெரும்பாலான தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளும் ஐதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்ட போதும் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்திற்காக சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தியதாகச் சொன்னார்கள். மே 10ம் தேதிக்குப் பிறகே ரஜினிகாந்த் அங்கிருந்து சென்னை திரும்பினார்.
இதனிடையே, தெலங்கானாவில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குக்கான தளர்வுகளை ஜுன் 10ம் தேதிக்குப் பிறகு படிப்படியாக அறிவிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதனால், தெலுங்குத் திரையுலகினர் இந்த மாதக் கடைசியில் இருந்து விடுபட்ட தங்களது படங்களின் படப்பிடிப்புகளை நடத்த ஆயத்தமாகி வருகிறார்களாம்.
ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டால் தமிழ் சினிமாவிலிருந்தும் பலர் அங்கு சென்று படப்பிடிப்பை ஆரம்பிக்கவும் வாய்ப்புள்ளது.