ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்புகள் நடத்தப்படாமல் முடங்கிப் போயுள்ளன. பெரும்பாலான தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளும் ஐதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்ட போதும் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்திற்காக சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தியதாகச் சொன்னார்கள். மே 10ம் தேதிக்குப் பிறகே ரஜினிகாந்த் அங்கிருந்து சென்னை திரும்பினார்.
இதனிடையே, தெலங்கானாவில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குக்கான தளர்வுகளை ஜுன் 10ம் தேதிக்குப் பிறகு படிப்படியாக அறிவிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதனால், தெலுங்குத் திரையுலகினர் இந்த மாதக் கடைசியில் இருந்து விடுபட்ட தங்களது படங்களின் படப்பிடிப்புகளை நடத்த ஆயத்தமாகி வருகிறார்களாம்.
ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டால் தமிழ் சினிமாவிலிருந்தும் பலர் அங்கு சென்று படப்பிடிப்பை ஆரம்பிக்கவும் வாய்ப்புள்ளது.