நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
சமீபத்தில் வெளியான அன்பிற்கினியாள் படத்தில் பாஸ்ட்புட் கடையின் பிரீசர் அறைக்குள் மாட்டிக் கொண்ட இளம் பெண்ணாக நடித்து பாராட்டுகளை பெற்றவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள். தும்பா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமாக பரவி இருந்தபோது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள எட்டேரி என்ற தனது கிராமத்துக்கு சென்று விட்டார். அங்கு தனக்கு சொந்தமான விவசாய நிலங்களில் விவசாய பணிகளை கவனிக்க ஆரம்பித்தார்.
இப்போது இரண்டாவது அலைத் தொற்று தீவிரமாக இருக்கும்போது மீண்டும் தனது கிராமத்திற்கே சென்று விவசாய வேலைகளை கவனிக்கத் தொடங்கி விட்டார். தான் வயலில் இறங்கி வேலை செய்யும் படங்களை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள அவர் "மீண்டும் விவசாய பணியில் இறங்கி விட்டேன். மழையை கொடுத்த இறைவனுக்கு நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.