பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். அதோடு, ஐதராபாத், வைசாக்கில் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருபவர், அடுத்தபடியாக பெண்களுக்கு தேவையான தற்காப்பு கலைகளை பயிற்சி கொடுக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். அதற்காக அந்த கலைகளை தற்போது தான் பயிற்சி எடுத்து வருகிறார்.
சமீபத்தில் ரகுல் பிரீத் சிங் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛என் குடும்பத்தினர் பலரும் இந்திய ராணுவத்தில் இருப்பதால் நான் குழந்தை பருவத்தில் இருந்தே மிகுந்த ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டேன். நான் உடற்பயிற்சி செய்து உடம்பை வலுவாக வைத்திருப்பதற்கும் அதுவே காரணம். மேலும், இதுதவிர சிறுவயதில் இருந்தே எனக்கு கோல்ப் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உண்டு. அந்த வகையில், பள்ளி காலத்தில் 14 முறை தேசிய கோல்ப் போட்டிகளில்விளையாடியிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.