ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். அதோடு, ஐதராபாத், வைசாக்கில் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருபவர், அடுத்தபடியாக பெண்களுக்கு தேவையான தற்காப்பு கலைகளை பயிற்சி கொடுக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார். அதற்காக அந்த கலைகளை தற்போது தான் பயிற்சி எடுத்து வருகிறார்.
சமீபத்தில் ரகுல் பிரீத் சிங் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛என் குடும்பத்தினர் பலரும் இந்திய ராணுவத்தில் இருப்பதால் நான் குழந்தை பருவத்தில் இருந்தே மிகுந்த ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டேன். நான் உடற்பயிற்சி செய்து உடம்பை வலுவாக வைத்திருப்பதற்கும் அதுவே காரணம். மேலும், இதுதவிர சிறுவயதில் இருந்தே எனக்கு கோல்ப் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உண்டு. அந்த வகையில், பள்ளி காலத்தில் 14 முறை தேசிய கோல்ப் போட்டிகளில்விளையாடியிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.