‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழ் சினிமா பிரபலங்கள் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நடிகர் சிம்பு டுவிட்டரில் ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பாக இருந்தார். பின்னர் திடீரென அதிலிருந்து விலகினார்.
மீண்டும் கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் தளத்தில் இணைந்தார். அதில் அவரை 2 லட்சத்திற்கும் கூடுதலானோர் பாலோ செய்து வருகிறார்கள். அதே காலகட்டத்தில் தான் இன்ஸ்டாகிராம் தளத்திலும் புதிய கணக்கை ஆரம்பித்தார். ஆனால், அங்கு அவரைத் தொடர்பவர்கள் டுவிட்டரை விட அதிகமாக இருக்கின்றனர். தற்போது இன்ஸ்டாவில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டிவிட்டது.
“முதல் மில்லியனுக்கு மில்லியன் நன்றிகள்,” என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிம்பு. சமீபத்தில் தான் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' படப் பாடலான 'மாங்கல்யம்' பாடல் அவருக்கு முதலாவது 100 மில்லியன் என்ற சாதனையைக் கொடுத்துள்ளது.
யு டியூபில் 100 மில்லியனையும், இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனையும் அடுத்தடுத்து பிடித்துள்ளார் சிம்பு.