விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது |
கேரளாவை பொறுத்தவரை நிபா வைரஸ் தாக்குதல், அதை தொடர்ந்த இரண்டு வருடங்களில் பெருமழை மற்றும் வெள்ள பாதிப்பு, இதோ தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் என தொடர்ந்து இயற்கை மற்றும் நோய் தாக்குதல்களை மாறி மாறி சந்தித்து வருகிறது. இதில் கேரள அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை, சுகாதார விஷயங்களை தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.ஷைலஜா. அடிப்படையில் பள்ளி ஆசிரியையான இவர், பாதிக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் களத்தில் இறங்கி செயல்பட்டு மக்களின் பாராட்டுக்களை பெற்றவர்.
இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற முடிந்த சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஆனால் அதில் கே.கே.ஷைலஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படாமல் அவரை ஒதுக்கி வைத்துள்ளனர். இது கேரளா மக்களிடையே மிகப்பெரிய ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
அதிலும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து #BringBackShailajaTeacher என்கிற ஹேஷ்டாக் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது. நடிகை மாளவிகா மோகனன், “எதற்காக சைலஜாவை மாற்றினீர்கள், என்ன நடக்குது இங்கே முதல்வரே” என முதல்வர் பினராயி விஜயனை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.
இவரை தொடர்ந்து நடிகை பார்வதியும் கே.கே.ஷைலஜாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். “கேரளாவில் உள்ள 140 சட்டசபை உறுப்பினர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கே.கே.ஷைலஜா டீச்சர். கொரோனா இரண்டாவது அலைக்கு எதிராக நாம் போராடிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் அவருக்கு அமைச்சர் பதவி இல்லையா..? எதை சொல்லியும் இதை நியாப்படுத்தாதீர்கள்.. தங்களுக்கு வேண்டிய தலைவர்களை மக்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.. அதை மறந்து விடாதீர்கள்” என காட்டமாக கூறியுள்ளார்.
இதேபோல நடிகைகள் ரீமா கல்லிங்கல் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரும் கே.கே.ஷைலஜா டீச்சருக்கு ஆதரவாக முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்கள்.