அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
ஜாக்கி சான் நடித்துள்ள 101வது படம் சிஇசட்-12. அவர் நடிக்கும் கடைசி ஆக்ஷன் படம் இது. "எனக்கு வயதாகி விட்டதால் இனி ஆக்ஷன் படங்களில் நடிக்க மாட்டேன் இதுவே என் கடைசி ஆக்ஷன் படம்" என்று ஜாக்கியே அறிவித்து விட்டார். கதை ஆர்மர் ஆப் காட்டின் தொடர்ச்சிதான். அபூர்வமான ஒரு பழங்கால பொருளை திருட பல்வேறு கூட்டங்கள் திட்டம்போடுகிறது. அந்த பொருள் கையில் இருந்தால் உலகையே ஆளலாம். அதை யார் கைக்கும் போகவிடாமல் தடுத்து அரசிடம் சேர்ப்பது ஜாக்கிசானின் பணி. மற்ற படங்களில் இல்லாத சில சிறப்பு அம்சங்கள் இந்தப் படத்தில் உண்டு. ஜாக்கி சான் படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். ஜாக்கியின் இரண்டாது 3டி படம். ஜாக்கியின் படத்தில் பெரும்பாலான நடிகர்கள் சீனர்களாக இருப்பார்கள். இதில் ஹீரோயின் தவிர மற்ற அனைவரும் ஹாலிவுட் நடிகர்கள். முந்தைய படங்களை விட ஜாக்கி இந்தப் படத்தின் புரமோஷனுக்காக உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்கிறார். அடுத்த மாதம் 17ந் தேதி ஜாக்கி மும்பை வருவதாக இருந்தது. பாதுகாப்பு தர இயலாது என்று மும்பை போலீஸ் கைவிரித்து விட்டதால் கேன்சல் செய்து விட்டார்.
இந்தியா முழுவதும் 3 ஆயிரம் தியேட்டர்களில் வருகிற 20ம் தேதி வெளிவருகிறது. ஜாக்கியின் 44 படங்களை இந்தியாவில் வெளியிட்ட இண்டோ ஓவர்சீஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் வெளியிடுகிறது. தமிழில் "இவன் நினைத்ததை முடிப்பவன்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழில் 120 தியேட்டர்களில் வெளியாகிறது.
உள்ளுர் சூப்பர் ஸ்டார் பிறந்த நாளுக்கு, உலக சூப்பர் ஸ்டாரின் படம் வருகிறது. என்ஜாய் பண்ணுங்க பிரண்ட்ஸ்...