சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நிதி உதவி அளிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யா - கார்த்தி குடும்பத்தினர், முருகதாஸ், உதயநிதி, வெற்றிமாறன், ஜெயம் ரவி குடும்பம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து நிதி உதவி அளித்தனர். நடிகர் அஜித் வங்கி பணபரிவர்த்தனை மூலம் நிதி உதவி வழங்கினார்.
இன்று நடிகர் ரஜினிகாந்த் தன் பங்கிற்கு ரூ.50 லட்சம் நிதியை முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கினார். இவரை தொடர்ந்து நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். வங்கி பணபரிவர்த்தனை மூலம் இந்த தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நடிகர் விக்ரம் தற்போது அவரின் 60வது படத்தில் தனது மகன் உடன் நடித்து வருகிறார். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கடந்தவாரம் தனது மகன் துருவ் உடன் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்திவிட்டு வந்தார் நடிகர் விக்ரம்.




