கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் அஜித் ரூ.10 லட்சம், பெப்சி அமைப்புக்கு நிதியாக வழங்கி உள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா தொழிலில் இருப்பவர்களும் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் பல திரைப்பிரபலங்கள் பெப்சி அமைப்புக்கு நிதி வழங்கினர். மேலும் உணவுப்பொருட்களையும் வழங்கினர். அதை முறையாக பிரித்து, பெப்சியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க ஏற்பாடு செய்தார் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி.
அதேப்போல் இந்த முறையும் ஊரடங்கு விதிக்கப்பட்டு இருப்பதால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ ஏற்பாடுகளை செய்து வருகிறார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. இந்நிலையில் பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவ ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளார் நடிகர் அஜித் குமார். கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நேற்று ரூ.25 லட்சம் நிதி வழங்கி உள்ளார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.