22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் |
திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் அஜித் ரூ.10 லட்சம், பெப்சி அமைப்புக்கு நிதியாக வழங்கி உள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா தொழிலில் இருப்பவர்களும் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் பல திரைப்பிரபலங்கள் பெப்சி அமைப்புக்கு நிதி வழங்கினர். மேலும் உணவுப்பொருட்களையும் வழங்கினர். அதை முறையாக பிரித்து, பெப்சியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க ஏற்பாடு செய்தார் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி.
அதேப்போல் இந்த முறையும் ஊரடங்கு விதிக்கப்பட்டு இருப்பதால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ ஏற்பாடுகளை செய்து வருகிறார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. இந்நிலையில் பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவ ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளார் நடிகர் அஜித் குமார். கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நேற்று ரூ.25 லட்சம் நிதி வழங்கி உள்ளார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.