பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் அஜித் ரூ.10 லட்சம், பெப்சி அமைப்புக்கு நிதியாக வழங்கி உள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா தொழிலில் இருப்பவர்களும் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் பல திரைப்பிரபலங்கள் பெப்சி அமைப்புக்கு நிதி வழங்கினர். மேலும் உணவுப்பொருட்களையும் வழங்கினர். அதை முறையாக பிரித்து, பெப்சியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க ஏற்பாடு செய்தார் அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி.
அதேப்போல் இந்த முறையும் ஊரடங்கு விதிக்கப்பட்டு இருப்பதால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ ஏற்பாடுகளை செய்து வருகிறார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி. இந்நிலையில் பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவ ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளார் நடிகர் அஜித் குமார். கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நேற்று ரூ.25 லட்சம் நிதி வழங்கி உள்ளார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.