எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |

கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் திரையுலகினர் நிறைய பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். அந்த வகையில், ராட்சசன், அசுரன் படங்களில் நடித்த அம்மு அபிராமியும் கடந்த மே 3-ந்தேதி அன்று தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தவர். அதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருவதாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது தனது டுவிட்டரில் கொரோனா தொற்றில் இருந்து தான் பூரண குணமடைந்து விட்டதாக ஒரு தகவல் வெளியட்டுள்ளார் அம்மு அபிராமி. நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். கடவுள் அருளாலும், அனைவரது பிரார்த்தனையாலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு முடிந்தவரை வெளியில் செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் அம்மு அபிராமி.