ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, அர்ச்சனா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛டாக்டர்'. அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இப்படம் முடிந்து ரிலீஸிற்கு தயாராகிவிட்டபோதிலும் கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் ரிலீஸ் ஆக முடியாமல் உள்ளது. கடைசியாக ரம்ஜான் தினத்தில் படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால் கொரோனாவால் இப்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸாகவில்லை. இதனால் படம் ஓடிடியில் வெளியாக போவதாக செய்திகள் வெளியாகின. ஆனாலும் அதிலும் ஏதோ சிக்கல் நீடிப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் டாக்டர் பற்றி ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வந்த நிலையில் இப்பட தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ஸ்டுடியோ ராஜேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛டாக்டர் படம் அப்டேட் கேட்டு தினமும் பலரும் எங்களை தொடர்பு கொள்கின்றனர். படமும் முடிந்து ரிலீஸிற்கு தயாராக உள்ளது. இந்த கொரோனா காலத்தில் படத்தை வெளியிட முடியாமல் பொருளாதார ரீதியான பிரச்னைகளையும் எதிர் கொண்டு வருகிறேன். இருப்பினும் என் சக்திக்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கையை எடுத்து படத்தை ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறேன். மற்றொருபுறம் கொரோனாவால் நம் சுற்றங்களையும், நண்பர்களையும் இழந்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில் டாக்டர் படம் ரிலீஸ் குறித்து நான் பேச விரும்பவில்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். கொரோனா விதிமுறையை பின்பற்றி வீட்டிலேயே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.




