25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
கொரோன பெருந்தொற்றால் தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் இறந்து வருகிறார்கள். கொரோன தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் வேகத்தை குறைக்க ரெம்டெசிவிர் என்ற மருந்து போடப்படுகிறது. இதனால் இந்த மருந்தை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைகளில் திரள்கிறார்கள். தட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் பல ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது டுவிட்டரில் "எனது நண்பர் ஒருவரின் தந்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு உடனடியாக ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது. முடிந்தவர்கள் உதவுங்கள்" என்று கேட்டிருந்தார்.
ஐஸ்வர்யாவின் கோரிக்கையை ஏற்ற ரசிகர் ஒருவர் அவரது நண்பருக்கு ரெம்டெசிவர் மருந்து அனுப்பி உள்ளார். இதை குறிப்பிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் "ரெம்டெசிவிர் மருந்து கிடைத்து விட்டது. உதவிய உள்ளங்களுக்கு நன்றி" என்று டுவிட்டரில் கூறியிருக்கிறார்.