கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே | பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன் | விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : ராதிகா ஆப்தே | மீண்டும் சிம்புவை இயக்குகிறாரா மணிரத்னம்? | தீபிகா படுகோனேவுக்கு எதிரான ரீல்ஸ்க்கு லைக் செய்தாரா தமன்னா : இன்ஸ்டா மீது புகார் | கணவர் மற்றும் மகன்களுடன் நெதர்லாந்துக்கு ஜாலி டிரிப் சென்ற நயன்தாரா | கமலுக்கு ஆதரவாக ‛வாய்ஸ்' கொடுக்காத நண்பர்கள், சினிமா அமைப்புகள் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கத்தில் நடிக்க இருந்த ஜெயலலிதா | பிளாஷ்பேக்: ஏவிஎம் ஸ்டூடியோவில் உருவான முதல் படம் | கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் 'தக் லைப்' படத்திற்கு தடை: கன்னட சினிமா வர்த்தக சபை முடிவு |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா'. செம்மரக் கடத்தல் பற்றிய கதையாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள காடுகளில் நடைபெற்றது. தற்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இப்படம் இரண்டு பாகமாக வெளியாக உள்ளது என செய்திகள் வெளிவந்தன. ஆனால், படக்குழுவினரிடம் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே, படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் 'புஷ்பா' படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் எனத் தெரிவித்துள்ளார்.
“புஷ்பா' கதையில் பலவிதமான காலகட்டங்கள் உள்ளன. இரண்டரை மணி நேரத்தில் மொத்த கதையையும் சுருக்குவது இயலாத விஷயம். அதனால், நாங்களும், இயக்குனர், நாயகன் இணைந்து பேசி படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளோம். முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இரண்டாம் பாகத்தை ஆரம்பிப்போம். இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் 10 சதவீதம் முடித்துவிட்டோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
நவராத்திரியின் போது முதல் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகத்தை அடுத்த வருட கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.