ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி ஹீரோக்கள் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகர்கள் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர் ஆகியோருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. நடிகர் பவன் கல்யாண் ஐதராபாத் புறநகரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்து குணமடைந்தார்.
நடிகர் அல்லு அர்ஜுன், அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். தற்போது தனக்கு கொரோனா நெகட்டிவ் என அவர் அறிவித்துள்ளார்.
“15 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு பரிசோதித்ததில் எனக்கு நெகட்டிவ். ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவரது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. இந்த ஊரடங்கு கேஸ்களை இன்னும் குறைக்க உதவி செய்யும் என எதிர்பார்க்கிறேன். வீட்டில் பத்திரமாக இருங்கள், உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜுனியர் என்டிஆர் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.




