தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி உள்பட பலர் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட பட நிறுவனம் அறிவித்து விட்டதால் கொரோனா இரண்டாவது அலையையும் பொருட்படுத்தாமல் ஐதராபாத்தில் முகாமிட்டு பலத்த கட்டுப்பாடுகளுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. கொரோனா இரண்டாவது அலை உருவானபோது அண்ணாத்த செட்டில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது போன்று இந்தமுறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்குள் பலத்த பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. வெளிநபர்கள் யாருமே உள்ளே செல்ல அனுமதி கிடையாது. அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
இப்படியான நிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடிக்கும் தருவாயில் இருக்கும் ரஜினி, விரைவில் சென்னை திரும்பயிருப்பதாக கூறுகிறார்கள். அப்படி சென்னை வரும் ரஜினி, வந்த வேகத்தில் தனக்கான டப்பிங் வேலைகளில் ஈடுபடப்போவதாகவும் தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. இப்படி ரஜினி வேகம் காட்டி வருவதால், தீபாவளிக்கு திட்டமிட்டபடி அண்ணாத்த திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.