இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி உள்பட பலர் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட பட நிறுவனம் அறிவித்து விட்டதால் கொரோனா இரண்டாவது அலையையும் பொருட்படுத்தாமல் ஐதராபாத்தில் முகாமிட்டு பலத்த கட்டுப்பாடுகளுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. கொரோனா இரண்டாவது அலை உருவானபோது அண்ணாத்த செட்டில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது போன்று இந்தமுறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்குள் பலத்த பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. வெளிநபர்கள் யாருமே உள்ளே செல்ல அனுமதி கிடையாது. அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
இப்படியான நிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடிக்கும் தருவாயில் இருக்கும் ரஜினி, விரைவில் சென்னை திரும்பயிருப்பதாக கூறுகிறார்கள். அப்படி சென்னை வரும் ரஜினி, வந்த வேகத்தில் தனக்கான டப்பிங் வேலைகளில் ஈடுபடப்போவதாகவும் தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. இப்படி ரஜினி வேகம் காட்டி வருவதால், தீபாவளிக்கு திட்டமிட்டபடி அண்ணாத்த திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.