தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அனைத்து பணிகளும் முடிந்து வெளிவர முடியாமல் இருக்கும் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுவதற்கென்று தனியாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. நேற்று சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா வேகமாக பரவி வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளர்குளுக்கு உதவும் பொருட்டு நன்கொடை வசூலிப்பது, தயாரிப்பாளர்களின் குடும்ப திருமண செலவு, பள்ளி, கல்லூரி கட்டண செலவுகளை சங்கத்தின் அறக்கட்டளையில் இருந்து வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு உதவ நிதி திரட்டும் பணிக்கு பொருளாளார் சந்திர பிரகாஷ் ஜெயின் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். பதிவு செய்யப்பட்ட படங்களின் தலைப்புக்கு செயற்குழு ஒப்புதல் வழங்கியது. இந்த கூட்டத்தில் துணை தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மன்னன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.