அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் |
தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சாம்ஸ் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது முதன்முறையாக ஆபரேஷன் ஜுஜுபி படத்தின் மூலம் ஹீரோ ஆகிறார். இதில் அவர் காமெடி ஹீரோவாக நடிக்கவில்லை. சீரியசான ஹீரோவாக நடிக்கிறார். படத்தை அருண்காந்த் இயக்குகிறார். இப்படத்தில் சாம்ஸுக்கு மனைவியாக வினோதினி வைத்தியநாதன் நடித்திருக்கிறார். இவர்களுடன், படவா கோபி, ராகவ், ஜெகன்,சந்தானபாரதி, வெங்கட் சுபா, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குநரும், தயாரிப்பாளருமான அருண்காந்த் கூறியதாவது: இது எனக்கு 3வது படம் ஏற்கெனவே கோக்கோ மாக்கோ, இந்த நிலை மாறும் படங்களை இயக்கி இருக்கிறேன். சாம்ஸை முதல் முறையாக ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறேன். மிகப்பெரிய ஆபரேஷன் ஒன்றை சர்வசாதாரணமாக கையாளுவது தான் கதை. அதனால் தான் படத்திற்கு ஆபரேஷன் ஜுஜுபி என்று தலைப்பு வைத்திருக்கிறோம்.
இது பேண்டஸி அரசியல் திரைப்படமாகும். ஒரு தனி மனிதன் சந்தோஷமாக வாழ்வதற்காக ஒரு நாடு உருவாக வேண்டும், என்ற சாமாணிய மக்களின் கனவு தான் படத்தின் கதை கரு. படம் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தயாராகி உள்ளது. என்றார்.