டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையில் மக்களுக்கு பல வகையில் உதவி செய்து நிஜ ஹீரோவானார் சினிமா வில்லன் சோனு சூட். தற்போது 2வது அலையிலும் தனது பணியை தீவிரமாக தொடங்கி உள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்த கொரோனா நோயாளியை உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போகுமாறு கூறியுள்ளனர். அருகில் உள்ள மருத்துவமனைகளிலும் இடம் இல்லை. அதனால் உயிருக்கு போராடும் தன்னை காப்பாற்றுமாறு அவர் சோனுசூட்டுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதை அறிந்த சோனுசூட் அவருக்கு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததுடன் ஜான்சிக்கு ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பி அவரை ஐதராபாத்துக்கு கொண்டு சேர்ந்தார். தற்போது சிகிச்சை பெற்று வரும் , அவர் உடல்நலம் தேறி வருகிறார். இதனால் சோனு சூட்டுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகிறது.