மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையில் மக்களுக்கு பல வகையில் உதவி செய்து நிஜ ஹீரோவானார் சினிமா வில்லன் சோனு சூட். தற்போது 2வது அலையிலும் தனது பணியை தீவிரமாக தொடங்கி உள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்த கொரோனா நோயாளியை உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போகுமாறு கூறியுள்ளனர். அருகில் உள்ள மருத்துவமனைகளிலும் இடம் இல்லை. அதனால் உயிருக்கு போராடும் தன்னை காப்பாற்றுமாறு அவர் சோனுசூட்டுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதை அறிந்த சோனுசூட் அவருக்கு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததுடன் ஜான்சிக்கு ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பி அவரை ஐதராபாத்துக்கு கொண்டு சேர்ந்தார். தற்போது சிகிச்சை பெற்று வரும் , அவர் உடல்நலம் தேறி வருகிறார். இதனால் சோனு சூட்டுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகிறது.