இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் கேரளாவை பொறுத்தவரை முதல் அலையில் ஆரம்பத்தில் கவனமாக இருந்தாலும், பின்னர் வந்த நாட்களில் நிறைய பாதிப்பை சந்தித்தது. அதிலிருந்தே இன்னும் மீளாமல் இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது அலையையும் சமாளிக்கும் விதமாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அப்படி தான் இதுவரை கொரோனா தடுப்பூசி விஷயத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகளை தனது டுவிட்டர் பக்கத்திலும் அப்டேட் செய்துள்ளார் கேரளா முதல்வர். இதனை கண்டு வியந்துபோன நடிகை ஐஸ்வர்ய லட்சுமி முதல்வரை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதுபற்றி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஐ லவ் யூ சீப் மினிஸ்டர். நான் எந்த ஒரு கட்சியை சேர்ந்தவளும் அல்ல. ஆனால் நமது மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் கையாளும் விதம் என்னை பிரமிக்க வைக்கிறது. இந்த கடினமான நேரத்தில் உங்களது செயல்பாடுகள் மிகுந்த நம்பிக்கையை தருகிறது” என கூறியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.
விஷாலுடன் ஆக்சன் படத்தில் ஜோடியாக அறிமுகமான மலையாள நடிகை' ஐஸ்வர்ய லட்சுமி, தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது