மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் கேரளாவை பொறுத்தவரை முதல் அலையில் ஆரம்பத்தில் கவனமாக இருந்தாலும், பின்னர் வந்த நாட்களில் நிறைய பாதிப்பை சந்தித்தது. அதிலிருந்தே இன்னும் மீளாமல் இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது அலையையும் சமாளிக்கும் விதமாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அப்படி தான் இதுவரை கொரோனா தடுப்பூசி விஷயத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகளை தனது டுவிட்டர் பக்கத்திலும் அப்டேட் செய்துள்ளார் கேரளா முதல்வர். இதனை கண்டு வியந்துபோன நடிகை ஐஸ்வர்ய லட்சுமி முதல்வரை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதுபற்றி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஐ லவ் யூ சீப் மினிஸ்டர். நான் எந்த ஒரு கட்சியை சேர்ந்தவளும் அல்ல. ஆனால் நமது மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் கையாளும் விதம் என்னை பிரமிக்க வைக்கிறது. இந்த கடினமான நேரத்தில் உங்களது செயல்பாடுகள் மிகுந்த நம்பிக்கையை தருகிறது” என கூறியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.
விஷாலுடன் ஆக்சன் படத்தில் ஜோடியாக அறிமுகமான மலையாள நடிகை' ஐஸ்வர்ய லட்சுமி, தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது