புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஒளிப்பதிவாளரும், பிரபல இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் இன்று காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கமல் இரங்கல்
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த், தளராத தன்முனைப்பினால் தன்னை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். அவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பு. அஞ்சலி''. என பதிவிட்டுள்ளார்.
ரஜினி இரங்கல்
நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில், ‛‛மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்'' என பதிவிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்
தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் வெளியிட்ட இரங்கல் செய்தி : இன்றைய காலை பொழுது என்னை நடுங்க வைத்தது. ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய காதல் தேசம் படம் தான் அவருக்கு ஒளிப்பதிவாளராக தமிழில் அறிமுக படம். துடிப்பான, தொழில் பக்தியுள்ள அந்த இளைஞர் பிற்காலத்தில் பெரிய அளவில் இந்திய சினிமாவில் புகழ் பெறுவார் என்று அன்றே நான் கணித்து சொன்னேன். நீங்கள் இவ்வளவு வேகமாக விடை பெற்றிருக்க கூடாது. மிகவும் வருத்தமளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்... ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்''.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குனர் ஷங்கரிடம் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி.ஆனந்த். கனா கண்டேன். அயன், கோ, காப்பான், மாற்றான், அனேகன், கவன் ஆகிய வெற்றிப் படங்களையும் இயக்கியவர். அதிகம் பேசாமல் தன் படங்களை மட்டுமே பேசவைத்தவர். தயாரிப்பாளர்களின் மனம் கவர்ந்தவர். நண்பர்கள் வட்டாரம் இவருக்கு பெரியது. தமிழ் சினிமாவை ஆங்கிலப்படங்களுக்கு நிகராக கொண்டு செல்லும் இயக்குனர்களில் இவரின் பங்கு அதிகம் என்றால் அது மிக இல்லை என்றே அனைவரும் சொல்வார்கள். அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தாருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.