டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

சென்னை : சென்னை தி.நகரில் வாடகை பாக்கி தராமல் நடிகை விஜயலட்சுமி மிரட்டி வருவதாக விடுதி மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தி.நகர் அபிபுல்லா சாலையில் ரிச் இன் என்ற சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு விடுதி உள்ளது. இதன் மேலாளர் விக்னேஷ்வரன் 34, நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் நடிகை விஜயலட்சுமி தன் சகோதரியுடன் பிப். 24ல் ரிச் இன் என்ற சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் விடுதி ஒன்றை எடுத்து வசித்து வந்தார்.
கடந்த மாதம் சகோதரியின் சிகிச்சைக்காக விடுதி அறையை பூட்டி சென்றவர் இம்மாதம் 24ம் தேதி திரும்பினார். அப்போது விடுதி மேலாளர் உத்தரவின்படி அவரது உடைமைகளை மாற்று அறையில் ஊழியர் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த நடிகை ஆத்திரத்தில் விடுதி ஊழியரை காலணியால் தாக்கி விடுதியில் தங்கியிருந்ததற்கான 1.50 லட்சம் ரூபாய் தராமல் மிரட்டி வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை பெற்று தருமாறு குறிப்பிட்டு இருந்தார். புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.