மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
நடிகர் மன்சூரலிகான் அவ்வப்போது எதையாவது செய்து தன்னை மீடியாக்களின் பக்கம் திருப்பிக் கொள்வார். அந்த வரிசையில் சமீபத்தில் நடிகர் விவேக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது அவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் பிரச்சினை ஏற்பட்டதாக பேட்டி அளித்தார். அதோடு கொரோனா தடுப்பூசிகள் போலியானது என்றும் சொன்னார்.
கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் தவறான பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் மன்சூரலிகான் மீது மாநகராட்சி ஆணையர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து மன்சூரலிகான் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால் மன்சூரலிகான் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது.
இதை தொடர்ந்து அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து அச்சத்தை ஏற்படத்தி வரும் மன்சூரலிகானுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் மன்சூரலிகான் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.