'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
மறைந்த நடிகர் விவேக் கிரீன் கலாம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். இந்த அமைப்பின் மூலம் ஒரு கோடி மரக் கன்றுகள் நடப்பட வேண்டும் என்றது அவரது லட்சியமாக இருந்தது. தற்போது விவேக் மறைந்து விட்ட நிலையில் காமெடி நடிகர் தாமு, கலாம் விவேக் என்ற அமைப்பை தொடங்கி இருப்பதாகவும், இது விவேக்கின் கிரீன் கலாம் அமைப்புக்கு போட்டியானது என்றும் தகவல்கள் வெளியானது.
இதுறித்து தாமு கூறியிருப்பதாவது: விவேக்கின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் விவேக் பத்தாண்டுகளுக்கு மேலாக செய்து வந்த மரம் நடும் பணியை பலரும் செய்யப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். இதுவே விவேக்கின் வெற்றிதான்.
விவேக் பல்லாண்டுகளாக எனக்கு நண்பர். அவர் தொடங்கியிருக்கும் அமைப்புக்கு எதிராக நான் கலாம் விவேக் என்கிற பெயரில் அமைப்பு தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நான் அப்படி சொல்லவில்லை. நான் போகும் இடங்களில் நடும் மரக்கன்றுகளுக்கு கலாம் விவேக் என்று பெயர் வைக்கப் போவதாகத்தான் சொன்னேன். அமைப்பு தொடங்கப்போவதாக சொல்லவில்லை.
விவேக் தொடங்கியிருக்கும் பசுமை கலாம் அமைப்பின் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் என்னை அழைத்தால் நான் கலந்து கொள்வேன். எனது நண்பனின் அமைப்புக்கு ஆதரவாக இருப்பேன். என்கிறார் தாமு.