கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். கொரோனா காலத்தில் தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது. தெலுங்கனா அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளின்படி படப்பிடிப்புக்கு வரும் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் படப்பிடிப்பில் பங்கேற்கும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர். படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்த மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள இருக்கிறார்கள்.