பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! | டாக்சிக் படத்தின் புதிய அப்டேட்! | பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக ஆதி! | சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 99 சாங்ஸ் படத்தின் மூலம் கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கெனவே அவர் சில இந்தி படங்களில் ஓரிரு காட்சிகளில் பாடகராக வந்து பாடல்கள் பாடி இருக்கிறார். இசை ஆல்பங்களில் தோன்றி நடித்திருக்கிறார். வந்தேமாதம் ஆல்பத்தில் அவர் தோன்றி நடித்தது உலக புகழ்பெற்றது. இந்த நிலையில் சினிமாவில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இருக்கவே விரும்புகிறேன். நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன். இசை மற்றும் கதை எழுதும் பணியை செய்யவே விரும்புகிறேன். எனது வாழ்க்கை வித்தியாசமானது. அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை அரசு வேலைக்குத்தான் போகச் சொல்வார்கள். ஆனால் எனது தாய் இசைத்துறையில் பணியாற்றும்படி கூறினார்.
சிலர் படம் இயக்குவீர்களா? என்று கேட்கிறார்கள். அந்த ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்க்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன் என்றார் ரஹ்மான்.