எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கொரோனா தாக்கம், அதை தொடர்ந்த ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் தடைபட்டிருந்த ரஜினிகாந்தின் அண்ணாத்த படம், மீண்டும் ஐதராபாத்தில் துவங்கியபோது, படக்குழுவினர் சிலருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, தற்போது ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இயக்குனர் சிவாவும் ரஜினியும் படப்பிடிப்பு தளத்தில் பேசிக்கொண்டு இருப்பது போல, , சில் அவுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளிஇட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வராமல் கடைசி நேரத்தில் தவிர்த்து ஏமாற்றம் அளித்தாலும், ஆரோக்கியமான உடல்நலத்துடன் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவது குறித்து, ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.