ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி |
கொரோனா தாக்கம், அதை தொடர்ந்த ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் தடைபட்டிருந்த ரஜினிகாந்தின் அண்ணாத்த படம், மீண்டும் ஐதராபாத்தில் துவங்கியபோது, படக்குழுவினர் சிலருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, தற்போது ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இயக்குனர் சிவாவும் ரஜினியும் படப்பிடிப்பு தளத்தில் பேசிக்கொண்டு இருப்பது போல, , சில் அவுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளிஇட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வராமல் கடைசி நேரத்தில் தவிர்த்து ஏமாற்றம் அளித்தாலும், ஆரோக்கியமான உடல்நலத்துடன் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவது குறித்து, ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.