ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி நடிக்கும் படம் தண்ணி வண்டி. சமஸ்கிருதி, பால சரவணன், தம்பி ராமய்யா, கன்னட நடிகை வினு தலால் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் மாணிக்க வித்யா கூறியதாவது:
தாயை இழந்த உமாபதி தந்தை தம்பி ராமய்யாவின் அரவணைப்பில் வளர்கிறார். ஆனால் எப்போதுமே அப்பனுக்கும், பிள்ளைக்கும் ஒத்துப்போகாது. தன்னை படிக்க வைத்து பெரிய ஆளாக்கவில்லை என்று தந்தை மீது உமாபதிக்கு கோபம். அவர் தனது நண்பன் பாலசரவணனுடன் இணைந்து கல்யாண வீடு, மற்றும் ஓட்டல்களுக்கு சிறிய வண்டியில் தண்ணிர் சப்ளை செய்கிறவர். பகல் முழுக்க கடுமையாக வேலை செய்துவிட்டு, ராத்திரியானால் குடித்து விட்டு ரகளை செய்வார்கள்.
கதை களம் மதுரை. புதிதாக வருகிறார் மாவட்ட வருவாய் அலுவலர் வினுதலால். அவர் பக்கா நேர்மையான அதிகாரி. அதிரடியான அதிகாரியும்கூட அவருக்கு ஒரு வீக்னஸ் இருக்கிறது. திருமணத்தில் நம்பிக்கை இல்லாத அவர் அதிக ஆண் நண்பர்களை விரும்புவார். அவர்களுடன் ஜாலியா இருந்து விட்டு போரடிக்கும்போது கழற்றி விட்டு விடுவார்.
அவர் ஒரு ஆணுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ ஒன்று உமாபதிக்கு கிடைத்து விடுகிறது. வினு தலாலால் பாதிக்கப்பட்ட மதுரை பெரும்புள்ளிகள் அவரை பழிவாங்க காத்திருக்கிறார்கள். இந்த வீடியோ அவர்கள் கைக்கு கிடைத்தா, அதை வைத்துக் கொண்டு தண்ணி வண்டி உமாபதி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. என்றார்.