மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் டைரக்சனில் உருவாகியுள்ள 'சுல்தான்' படம் நாளை வெளியாக இருக்கிறது. அதேசமயம் தெலுங்கில் நாகார்ஜுனா நடித்துள்ள 'வைல்ட் டாக்' என்கிற படமும் நாளை தான் வெளியாகிறது. இந்தநிலையில் 'வைல்ட் டாக்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நாகார்ஜுனா, சுல்தான் படத்துக்கு வருத்தத்துடன் வாழ்த்து சொன்னார்.
இந்த நிகழ்வில் நாகார்ஜுனா பேசும்போது, “தமிழில் எனக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவர் பெயர் கார்த்தி. அவரது படமான சுல்தான் கூட நாளை தான் வெளியாகிறது. ஆனால் இரண்டு பேரின் படங்களும் ஒன்றாக வெளியாவதில் எனக்கு இஷ்டமில்லை.. அதேசமயம் அவரது படம் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்” என கூறினார்.
நாகார்ஜுனாவும் கார்த்தியும் தோழா என்கிற படத்தில் பாசமான அண்ணன் தம்பி போல இணைந்து நடித்திருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கில் இருவருமே அந்தப்படத்தின் வெற்றியை ஒன்றாக ருசித்தனர்.. அதனால் தற்போது தெலுங்கில் இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் மோதுவது போல வெளியாகிறதே என்கிற வருத்தத்தில் தான் நாகார்ஜுனா அப்படி கூறியுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது.