'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் போனி கபூர் தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இவர்கள் மூவரும் சேர்ந்துள்ள படம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. பிரமாண்டமான ஆக்ஷன் காட்சியை ஸ்பெயின் நாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இது நிறைவடைந்த பின்னர் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். வலிமை அப்டேட் கேட்டு அவர்கள் பலரையும் தொந்தரவு செய்தது சர்ச்சையானது. இதையடுத்து அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி அப்டேட் வெளியாகும் போனி கபூர் அறிவித்ததால் அஜித் ரசிகர்கள் சற்று அமைதியாகினர்.
இந்நிலையில் வலிமை குறித்த புதிய அப்டேட் ஒன்றை போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதில், "வலிமை படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்", என அவர் குறிப்பிட்டுள்ளார். படம் நிறைவடையும் முன்பே திரையரங்கு உரிமை வியாபாரமாகிவிட்டதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.