மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் போனி கபூர் தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இவர்கள் மூவரும் சேர்ந்துள்ள படம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. பிரமாண்டமான ஆக்ஷன் காட்சியை ஸ்பெயின் நாட்டில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இது நிறைவடைந்த பின்னர் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். வலிமை அப்டேட் கேட்டு அவர்கள் பலரையும் தொந்தரவு செய்தது சர்ச்சையானது. இதையடுத்து அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி அப்டேட் வெளியாகும் போனி கபூர் அறிவித்ததால் அஜித் ரசிகர்கள் சற்று அமைதியாகினர்.
இந்நிலையில் வலிமை குறித்த புதிய அப்டேட் ஒன்றை போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதில், "வலிமை படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்", என அவர் குறிப்பிட்டுள்ளார். படம் நிறைவடையும் முன்பே திரையரங்கு உரிமை வியாபாரமாகிவிட்டதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.




