என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் சினிமாவில் கமல், ரஜினி இருவருக்கும் இடையில் இருந்து கொண்டு அவர்களுக்கு நிகரான வெற்றியையும், வசூலையும் கொடுத்தவர் ராமராஜன். இன்று வரை நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற உறுதியோடு இருக்கிறார்.
சினிமா, அரசியல் என ஒரு ரவுண்ட் வந்துவிட்ட அவர் வாழ்வில் நிறைய ஏற்ற, இறக்கங்களை பார்த்துவிட்டார். சமீபத்தில் அவரை கொரோனா தாக்கியது. அதன் கொடூர பிடியில் இருந்தும் தப்பி வந்து விட்டார். இப்போது அவர் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக திரைக்கதை எழுதும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ராமஜான் மீண்டும் இயக்குனராக களம் இறங்குகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛நான் ஹீரோவாக 44 படங்களில் நடித்து இருக்கிறேன். 5 படங்களை இயக்கி இருக்கிறேன். 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருந்தன. நான் இயக்க இருக்கும் புதிய படமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருக்கும். சினிமாவில் பெண்களை மதித்தவன். அதுபோல் அரசியலில் நான் கடைசி வரை ஜெயலலிதா அம்மாவின் தொண்டனாகவே இருப்பேன். தற்போது நான் தயார் செய்து கொண்டிருக்கும் கதை விஜய்சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும். மேலும் சில கதைகளும் என்னிடம் உள்ளன'' என்கிறார் ராமராஜன்.