தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
நடிகர் பிரித்விராஜை தொடர்ந்து, அடுத்ததாக தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் மோகன்லால். ஆனால் அவரைப்போல கமர்ஷியல் ஆக்சன் கதையில் இறங்காமல் 'பாரோஸ் ; கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்' என்கிற, குழந்தைகள் ரசிக்கும் விதமான வரலாற்று படத்தை தான் இயக்குகிறார்.
சமீபத்தில் இந்தப்படத்தின் துவக்கவிழா பூஜை நடைபெற்ற நிலையில், இதன் படப்படிப்பையும் தாமதமின்றி துவங்கி விட்டார் மோகன்லால். அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்தப்படம் முழுக்க முழுக்க 3டியில் தயாராகிறது. ஆனால் முதலில் 2டியில் எடுத்து பின்னர் 3டிக்கு மாற்றாமல், 3டி கேமரா மூலமாகவே காட்சிகள் படமாக்கப்படுகின்றன. அதற்கேற்றவாறு நாற்பது வருடங்களுக்கு முன் வெளியான, 3டியில் உருவான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய, ஜிஜோ பொன்னூஸ் என்பவர் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
நானூறு வருடங்களுக்கு முன் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது, சேர்த்துவைத்த சொத்துக்களை, பாரோஸ் என்கிற பாதுகவாலன் காவல் காத்து வருவதாக ஒரு புனைவு கதை ஒன்று கேரளாவில் சொல்லப்பட்டு வருகிறது. அந்த கதையைத்தான் படமாக இயக்கி, தானே ஹீரோவாகவும் நடிக்கிறார் மோகன்லால்.