அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லி, அதையடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். அதன்பிறகு பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது புதிய படத்தை இயக்கப்போவதாக மும்பை சென்று அவரை சந்தித்து விட்டு திரும்பினார். ஆனபோதும் அந்த படம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனால் விஜய் 66ஆவது படத்தை அட்லி இயக்கப் போவதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் ஷாரூக்கான் படத்தின் ப்ரீபுரொடக்சன்ஸ் வேலைகளில் அட்லி ஈடுபட்டு வருவதாகவும் இன்னொரு பக்கம் செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் அட்லியின் மனைவியான பிரியா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது உதவி இயக்குனர் குழுவுடன் கையில் ஹெலிகாப்டர், கார் பொம்மைகளை வைத்துக் கொண்டு கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் அட்லி. இதை வைத்துப் பார்க்கையில் ஷாரூக்கானை வைத்து தான் இயக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் அட்லி இறங்கியிருப்பது தெரிகிறது.
அதேசமயம், ஏற்கனவே ஷாருக்கானிடம் அட்லி சொன்ன இரண்டு கதைகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் தற்போது மூன்றாவதாக ஒரு கதை அவர் ரெடி பண்ணி வருவதாகவும் கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.