துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் பான் இந்தியா படம் புஷ்பா. இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதியைத் தான் அணுகினர். ஆனால் அவர் கால்சீட் பிரச்சினை காரணமாக அப்படத்தில் நடிக்கவில்லை. அதையடுத்து ஆர்யாவிடம் பேசினர், அவரும் மறுத்துவிட்டார்.
அவரைத் தொடர்ந்து தற்போது பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலை இப்படத்தில் வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கனவே தமிழ், மலையாளத்திலும் ஓரளவுக்கு ரசிகர்களை அல்லு அர்ஜூன் வைத்திருக்கும் நிலையில இப்போது பஹத் பாசிலும் இணைந்திருப்பதால் தென்னிந்தியாவில் புஷ்பா பெரிய அளவில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இப்படத்தை சுகுமார் இயக்குகிறார். ஆகஸ்ட் 13ல் புஷ்பா திரைக்கு வருகிறது.