ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் எஸ்.பி.ஜனநாதனும் முக்கியமானவர். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கியவர், இப்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை எடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த இவர், மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஞாயிறு அன்று மரணத்தை தழுவினார். அவரின் திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை தந்தது.
அவர் மறைந்து இரு தினங்கள் ஆன நிலையில் அவரது வீட்டில் மற்றுமொரு சோகம் நிகழ்ந்துள்ளது. சகோதரரின் மறைவு தாங்க முடியுமாமல் ஜனநாதனின் சகோதரி லட்சுமி, மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். ஜனநாதன் வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு இழப்புகள் அவரது குடும்பத்தை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.