சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகரான சிவகுமாருக்கு சூர்யா, கார்த்தி என இரு மகன்கள். இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.
நடிகர் கார்த்திக்கும் ரஞ்சனி என்பவருக்கும் 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 7 வயதில் உமையாள் என்ற மகள் இருக்கிறாள். கடந்த வருடம் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். ஐந்து மாதங்களாக அக்குழந்தைக்கு 'கந்தன்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
அதற்காக மகனுக்கு ஒரு கடிதம் எழுதி அப்பெயரை அறிவித்திருக்கிறார் கார்த்தி. “கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்...
அப்பா,” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலத்தில் பலரும் பல்வேறு மொழிக் கலப்புடன் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர்களை வைக்கும் நிலையில் கார்த்தி அவரது குழந்தைகளுக்கு 'உமையாள், கந்தன்' என அழகு தமிழில் கடவுள்களின் பெயரை வைத்துள்ளார்.




