நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி, தனது தாயின் வழியை பின்பற்றி நடிகையாக மாறிவிட்டார். தமிழில் ஹீரோ படத்தில் நடித்தவர், அடுத்ததாக சிம்புவுடன் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல மலையாளத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த இவர், தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் ஜோடியாக 'ஹ்ருதயம்' என்கிற படத்தில் நடிக்கிறார். வினீத் சீனிவாசன் இயக்கிவரும் இந்தப்படத்தில் தனது படப்பிடிப்பை நேற்றுடன் நிறைவு செய்தார் கல்யாணி பிரியதர்ஷன்.
இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள கல்யாணி, “நான் சினிமாவுக்கு வந்தது மற்ற சிலரை போல அதன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அல்ல.. எனது சிறுவயது விடுமுறை தினங்கள் எல்லாமே என் தந்தையின் படப்பிடிப்பு தளத்தில் தான் கழிந்தன. என் தந்தை படப்பிடிப்பு சமயங்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக சந்தோஷமாக இருந்ததை போல, வேறு ஒரு மனிதரை நான் பார்த்தது இல்லை. அப்போதே நானும் எதிர்காலத்தில் இதேபோன்ற ஒரு சந்தோஷ மனுஷியாக வாழவேண்டும் என முடிவுசெய்தே இந்த துறைக்குள் நுழைந்தேன்.. ஹ்ருதயம் படப்பிடிப்பில் நான் கலந்துகொண்ட இந்த இரண்டு மாதங்களும் அப்போது நான் கண்ட அந்த கனவு நனவானதை நிஜமாகவே உணர்ந்தேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் கல்யாணி.