ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
ஓசூர்: கமல் அவரது கட்சிக்கு அழைத்தாலும், இப்போது செல்ல மாட்டேன். நடிப்பு மட்டும் தான் என் தொழில், என, மிருகம் படத்தின் நடிகர் ஆதி கூறினார்.
இது குறித்து, ஓசூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அரசியலுக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு என் ஆதரவு உண்டு. மக்களுக்கு நல்லது செய்பவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். யார் வருவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். என் ரசிகர்கள், யாரை பிடிக்கிறதோ, அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள். எல்லோரும் முன்பு போல் இல்லை; மிகவும் தெளிவாக உள்ளனர்.
யார் நல்லது செய்கிறார்கள் என்பது என் ரசிகர்களுக்கு தெரியும். கமல் அவரது கட்சிக்கு அழைத்தாலும், இப்போது செல்ல மாட்டேன். நடிப்பு மட்டும் தான் என் தொழில். சினிமா துறையில் இருந்து, மக்களுக்கு சேவை செய்ய, நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். தற்போது தமிழில், கிளாப், பாட்னர், தெலுங்கில், குட்லக் சகி ஆகிய படங்கள் நடித்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.