சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ஆடுகளம் படத்தில் தனுசின் நண்பராக நடித்து பிரபலமானவர் முருகதாஸ். அன்று முதல் ஆடுகளம் முருகதாஸ் என்றே அழைக்கப்படுகிறார். மௌனகுரு படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்தன் மூலம் மேலும் பிரபலமானார். குட்டிப் புலி, தகராறு , கண் பேசும் வார்த்தைகள் , தடையறத் தாக்க, முகமூடி, இது கதிர்வேலன் காதல், குக்கூ, விசாரணை, சைத்தான் உள்பட பல படங்களில் நடித்தார். பெரும்பாலும் ஹீரோவின் நண்பர், அல்லது வில்லனின் அடியாள் மாதிரியான கேரக்டரில் நடித்தார்.
தற்போது முதன் முறையாக ஓம் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜகா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். யோகிபாபு நடித்த காக்டெய்ல் படத்தை இயக்கிய ரா.விஜயமுருகன் இயக்குகிறார். வி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் பாஸ்கர் இசை அமைக்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் ரா.விஜயமுருகன் கூறியதாவது: கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மனநல காப்பகம் நடத்தி வருகிறார் மைம் கோபி அந்த இடத்தை கைப்பற்ற ஒரு கும்பல் பல வழிகளில் முயற்சி செய்கிறது. ஆனால் அவ்விடத்தை கொடுக்க மறுக்கிறார் மைம் கோபி. காப்பகம் காப்பாற்றப்பட்டதா? கைப்பற்றப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறோம்.
பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து பின்னப்பட்ட முருகதாஸ் கதாபாத்திரம் புதுமையாக இருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பாபநாசத்தில் தொடங்கி கொடைக்கானலில் முடிந்தது. என்றார்.