ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ஆடுகளம் படத்தில் தனுசின் நண்பராக நடித்து பிரபலமானவர் முருகதாஸ். அன்று முதல் ஆடுகளம் முருகதாஸ் என்றே அழைக்கப்படுகிறார். மௌனகுரு படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்தன் மூலம் மேலும் பிரபலமானார். குட்டிப் புலி, தகராறு , கண் பேசும் வார்த்தைகள் , தடையறத் தாக்க, முகமூடி, இது கதிர்வேலன் காதல், குக்கூ, விசாரணை, சைத்தான் உள்பட பல படங்களில் நடித்தார். பெரும்பாலும் ஹீரோவின் நண்பர், அல்லது வில்லனின் அடியாள் மாதிரியான கேரக்டரில் நடித்தார்.
தற்போது முதன் முறையாக ஓம் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜகா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். யோகிபாபு நடித்த காக்டெய்ல் படத்தை இயக்கிய ரா.விஜயமுருகன் இயக்குகிறார். வி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் பாஸ்கர் இசை அமைக்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் ரா.விஜயமுருகன் கூறியதாவது: கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மனநல காப்பகம் நடத்தி வருகிறார் மைம் கோபி அந்த இடத்தை கைப்பற்ற ஒரு கும்பல் பல வழிகளில் முயற்சி செய்கிறது. ஆனால் அவ்விடத்தை கொடுக்க மறுக்கிறார் மைம் கோபி. காப்பகம் காப்பாற்றப்பட்டதா? கைப்பற்றப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறோம்.
பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து பின்னப்பட்ட முருகதாஸ் கதாபாத்திரம் புதுமையாக இருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பாபநாசத்தில் தொடங்கி கொடைக்கானலில் முடிந்தது. என்றார்.