கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ஆடுகளம் படத்தில் தனுசின் நண்பராக நடித்து பிரபலமானவர் முருகதாஸ். அன்று முதல் ஆடுகளம் முருகதாஸ் என்றே அழைக்கப்படுகிறார். மௌனகுரு படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்தன் மூலம் மேலும் பிரபலமானார். குட்டிப் புலி, தகராறு , கண் பேசும் வார்த்தைகள் , தடையறத் தாக்க, முகமூடி, இது கதிர்வேலன் காதல், குக்கூ, விசாரணை, சைத்தான் உள்பட பல படங்களில் நடித்தார். பெரும்பாலும் ஹீரோவின் நண்பர், அல்லது வில்லனின் அடியாள் மாதிரியான கேரக்டரில் நடித்தார்.
தற்போது முதன் முறையாக ஓம் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜகா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். யோகிபாபு நடித்த காக்டெய்ல் படத்தை இயக்கிய ரா.விஜயமுருகன் இயக்குகிறார். வி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் பாஸ்கர் இசை அமைக்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் ரா.விஜயமுருகன் கூறியதாவது: கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மனநல காப்பகம் நடத்தி வருகிறார் மைம் கோபி அந்த இடத்தை கைப்பற்ற ஒரு கும்பல் பல வழிகளில் முயற்சி செய்கிறது. ஆனால் அவ்விடத்தை கொடுக்க மறுக்கிறார் மைம் கோபி. காப்பகம் காப்பாற்றப்பட்டதா? கைப்பற்றப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறோம்.
பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து பின்னப்பட்ட முருகதாஸ் கதாபாத்திரம் புதுமையாக இருக்கும். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பாபநாசத்தில் தொடங்கி கொடைக்கானலில் முடிந்தது. என்றார்.