ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு |
80களில் தனது கவர்ச்சி ஆட்டத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் அனுராதா, பத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். இவரது மகள் அபிநயஸ்ரீயும் படங்களில் நடித்தார். ஆனால் பெரிய வாய்ப்புகள் அமையாததால் நடன இயக்குனர் ஆனார். அனுராதாவின் மகன் கெவின் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
ஒளிமார் சினிமாஸ் சார்பாக ஜே.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள பூம் பூம் காளை படத்தில் கெவின் ஹீரோவாக நடிக்கிறார். ஆர்.டி.குஷால் குமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர் சிவலிங்கா படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, சச்சு, கிரேன் மனோகர், அபிநயஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஆர்.டி.குஷால் கூறியதாவது: நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள். நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட விரும்புகிறாள். நாயகனோ திருமணம் முடிந்த பின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே. அது நடப்பது எப்போது என பூம் பூம் காளையாக அலைபாய்கிறான். இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா இல்லையா என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறோம். என்றார். படம் நாளை வெளிவருகிறது.